தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் சென்னையில் செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று மத நல்லிணக்க மாநில மாநாடு நடைபெறுகிறது. அதில் பல மதத் தலைவர்களும் அறிஞர் பெருமக்களும் பங்கேற்று உரையாற்றுகிறார்கள். இந்த மாநாடு பற்றி அதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பேராசிரியர் அருணனோடு நடத்திய நேர்காணலின் முக்கிய பகுதிகள்:
தமிழ்நாட்டில் இத்தகைய மாநாடு தேவைதானா? வடமாநிலங்கள் போல இங்கு நிலைமை இல்லையே?
வட மாநிலங்களைவிட இங்கு மத நல்லிணக்கம் சிறப்பாக உள்ளது என்பது உண்மையே. ஆனால் இங்கும் அதற்கு ஆபத்து வந்துகொண்டிருக்கிறது. மத வெறி சக்திகளை லேசாக நினைத்து விடக்கூடாது. காரணம் மதப்பகைமையைத் தூண்டும் மனுவாத சக்திகள் இந்த துணைக் கண்டத்தில் பல நூறு ஆண்டுகளாக வேரூன்றியுள்ளன. அவை சுதந்திரப் போராட்ட காலத்தில் அடங்கியிருந்தன. பொது எதிரியான ஆங்கிலேயர்களை எதிர்த்து மக்கள் மதவேறுபாடின்றி போரா டினார்கள். அந்த ஒற்றுமை எழுச்சியில் மதப்பகைமையை கிளப்பிவிட முடிய வில்லை. ஆனால் சுதந்திரம் கிடைக்கும் சமயத்தில் அதைச் செய்ய முடிந்தது. மதத்தின் அடிப்படையில் இந்த பூமி இரு நாடுகளாகப் பிளவுபடுத்தப் பட்டது. அதில் ஏகாதிபத்தியத்தின் சதி இருந்தது உண்மை என்றாலும் அதற்கு ஏதுவாக “இந்துக்கள் ஒரு தேசம், முஸ்லிம்கள் இன் னொரு தேசம்” என்று மதரீதியாக இரு நாடு கள் இருப்பதாக முதலில் சொன்னது “இந் துத்துவா” வின் பிதாமகன் சாவர்க்கர்தான். 1925ல் உதயமான ஆர்எஸ்எஸ் சுதந்தி ரப் போராட்டத்தில் பங்கு பெறுவதில்லை என்பதை ஒரு கொள்கை முடிவாகவே வகுத்திருந்தது. அதன் குருஜி கோல் வால்கர் “ஆங்கிலேயரை எதிர்த்து இந்துக்களே உங்கள் சக்தியை விரயமாக்கா தீர்கள், அதை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் எனும் மூன்று எதிரிகளுக்கு எதிராக பயன்படுத்துங்கள்” என்றார். அப்படிப்பட்ட அமைப்பின் அரசியல் பிரி வான பாஜக மத்தியில் தனிப்பெரும்பான் மையோடு மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கி றது. அதன் தாக்கம் தமிழ்நாட்டில் மட்டும் இருக்காது என்று நாம் எண்ணக் கூடாது. அதிலும் ஜெயலலிதாவின் மறை விற்குப் பிறகான அதிமுக, தனது ஆட்சி யைத் தக்க வைத்துக் கொள்ள பாஜக விற்கு எந்த அளவிற்கும் பணிந்து போகத் தயாராக உள்ளது. இந்து-முஸ்லிம் ஒற்று மைக்காக போராடிய காரணத்திற்காக தேசத் தந்தை மகாத்மா காந்தியைப் படு கொலை செய்தான் கோட்சே. அவனை ‘இந்து பயங்கரவாதி’ என்றார் கமல ஹாசன். ‘இந்துத்துவா பயங்கரவாதி’ என்று சொல்லியிருந்தால் மிகச் சரியாக இருந்தி ருக்கும் என்றாலும் அவன் பயங்கரவாதி தானே? அதற்காக அவர் நாக்கை வெட்ட வேண்டும் என்று சொன்னது அதிமுகவின் ஓர் அமைச்சர்! இவர்கள் சங்பரிவாரத்தின் எத்தகைய தொண்டரடிப்பொடிகளாக இருக்கிறார்கள் என்பதை பார்த்துக் கொள்ளவும். 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிக் கொணரப்பட்ட அத்திவரதர் வழிபாட்டில் கூட மதப்பகைமைக்கு வழி வகுக்க பார்த்தார் ஜீயர். முஸ்லிம்களுக்கு பயந்து தான் வரதர் குளத்திற்குள் இடப்பட்டார் என்று கூறினார். ஆதாரம் கேட்டால் அவருக்கு வேண்டியவர்கள் வெளியிட்ட ஒரு துண்டுப் பிரசுரத்தை காட்டினார்! “கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, அவை மதமாற்றத்தில் ஈடுபடுகின்றன” என்று ஒரு நீதிபதி அப்படியே சங் பரிவாரத்தின் அவ தூறை வெளிப்படுத்தினார். அதற்கு ஜன நாயக மாதர் சங்கம் போன்ற அமைப்பு களும், பல அறிவுஜீவிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நீதிபதி அதை திரும்பப்பெற வேண்டி வந்தது. வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு வந்த கிறிஸ்தவர்களை இந்து முன்னணி யினர் தாக்கியிருக்கிறார்கள். இவை யெல்லாம் நமது தமிழகத்தில் மிகச் சமீ பத்தில் நடந்திருக்கும் நிகழ்வுகள். அதுமட்டு மல்ல, ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி என்று மதப் பதற்றத்தை உருவாக்கி வரு கிறது அதே இந்து முன்னணி எனும் சங்பரி வார அமைப்பு. இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் பிள்ளை யார் சிலைகளை நிறுவப் போவதாக அதன் தலைவர் அறிவித்திருக்கிறார். அவற்றை கரைக்கிற ஊர்வலம் என்று அவர்கள் மத வெறியைத் தூண்டக்கூடும். எனவே நமது மாநிலத்திலும் மத நல்லிணக்கத்தை காக் கிற இத்தகைய மாநாடு தேவை எனும் முடி வுக்கு வந்தது மக்கள் ஒற்றுமை மேடை.
தமிழகம் பெரியார் பூமி அல்லவா? இங்கு மதவெறி சக்திகள் வளர்ந்திடுமா என்ன?
ஆம்! இது பெரியார் பூமிதான். சொல்லப்போனால் இது அயோத்திதாசர் பூமியும்கூட, சிங்காரவேலர் பூமியும் கூட. அதனால்தான் சங் பரிவாரிகள் இங்கே தங்களை வளர்த்துக் கொள்ள சிரமப்படு கிறார்கள். ஆனால் அதனாலேயே அவர்கள் தமிழகத்தைக் கைப்பற்ற வெறியோடும் இருக்கிறார்கள். தங்களுக்கு சவாலான பூமி இது. இதை வென்றுவிட்டால் முழு இந்தியாவும் தங்கள் பிடியில் என்று நினைக்கிறார்கள். ‘இது பெரியார் பூமியல்ல, நாயன்மார் கள் - ஆழ்வார்கள் பூமி என்பதை விரை வில் உணர்த்துவோம்’என்று பாஜக தலைவர் தமிழிசை பேசுவதை சாதார ணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவர் களுக்கு எந்தவொரு வாய்ப்பையும் தந்து விடக்கூடாது. மத்தியில் மிருக பலத்துடன் அவர்கள் அதிகாரத்தில் இருப்பதால் நாம் மக்கள் பலத்தை ஒன்றுதிரட்ட வேண்டும். வருமுன் காப்பவனே அறிவாளி, வந்தபின் பார்ப்போம் என்பவன் ஏமாளி.
சங்பரிவாரத்தின் மதவெறி சிறுபான்மை யோருக்கு தானே பாதிப்பை தரும். அதை பெரும்பான்மை மதத்தவர் சீரியசாக எடுத்துக் கொள்வார்களா?
சங் பரிவாரத்தின் தந்திரமும் நம்பிக்கை யும் இதில்தான் உள்ளது. தங்களின் வெறித்தனத்தை ‘இந்து’ எனும் முகமூடி போட்டு மறைத்துக் கொண்டு செயல்படுத்து கிறார்கள். அவர்கள் ஒருபோதும் எஸ்சி, பிசி இந்துக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தது இல்லை. பிசிகளுக்கு இடஒதுக் கீடு என்றதும் வி.பி. சிங் ஆட்சியையே கவிழ்த்தவர்கள். எஸ்சி என்கிற காரணத் தால் ஒருவரின் பிணத்தை ஒரு பாதையில் அனுமதிக்கவில்லை. விநாயகர் செல்லும் பாதைக்காக குரல் கொடுக்கும் இந்து முன்னணி அந்த இந்துவின் பாதைக்காக குரல் கொடுக்கவில்லை! அம்பேத்கர் சிலையை உடைத்த போது இவர்கள் மவுனித்து போனார்கள். சகல சாதி பெண்களுக்கும் இவர்கள் எதிரானவர்கள் என்பதை குருமூர்த்தியின் பேச்சு உணர்த்தியது. உயர் சாதியில் உள்ள மனித நேயர்களும் மதவெறியை விரும்ப மாட்டார்கள். அமைதியான வாழ்வுதான் முன்னேற்றத்திற்கான முன் நிபந்தனை என்பதை அவர்கள் அறிவார்கள். அது போல தொழிலாளி வர்க்கமும் தனது வாழ்வாதாரத்திற்கும், வர்க்கப் போராட்டத் திற்கும் மத நல்லிணக்கம் ஓர் அஸ்திவாரம் என்பதை அறிவார்கள். அதையெல்லாம் நினைவுபடுத்தினால் சங்பரிவாரம் இந்துக் களுக்கும், ஒட்டுமொத்த மனித சமூகத்திற் கும் எதிரானவர்கள் என்பதை புரிந்து கொள்வார்கள்.
பெரும்பான்மை மதவெறியை எதிர்க்கி றோம் என்று சிறுபான்மையினர் மத்தியி லும் மதவெறி கிளம்புகிறதே?
ஒருவகை மதவெறிக்கு இன்னொரு வகை மதவெறி பதிலாகாது. மாறாக, அது சங் பரி வாரத்திற்கு வசதியாகப் போகும். அதைக் காட்டி தங்களை மேலும் வளர்த்துக் கொள்வார்கள். மதவெறிக்கு சரியான பதிலடி மதநல்லிணக்கமே, மனிதநேயமே, மக்கள் ஒற்றுமையே. ஆனால் இது வெறும் முழக்கமாக இருந்து பயனில்லை. இதை நடைமுறையில் காண்பிக்க வேண்டும். குறிப்பாக பெரும்பான்மை மதத்திலுள்ள நல்லிணக்கவாதிகளை அணி திரட்டி காட்ட வேண்டும். அப்போதுதான் சிறுபான்மை யோருக்கு இந்த முழக்கத்தின் மீது நம்பிக்கை வரும். அதையெல்லாம் மனதில் கொண்டுதான் இந்த மாநாடு நடத்தப்படு கிறது.
தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை வரவேற்கிறவர்களும் மத நம்பிக்கை யில்தானே இருக்கிறார்கள், விஞ்ஞான உணர்வுக்கு வருவதில்லையே ஏன்?
இதுவொரு வினோதம்தான். நவீன கைபேசியின் மூலமும் மத நம்பிக்கை பிரச்சாரத்தை மனிதர்கள் உற்சாகமாகக் கேட்கிறார்கள்! மத நம்பிக்கைக்கு நெடுங் காலத்திய, மிக ஆழமான வாழ்வியல் கார ணங்கள் உள்ளன. மார்க்சியமே அதைக் கண்டு சொன்னது. “மண்ணுலகில் சொர்க் கத்தை படைக்காதவரை விண்ணுலக சொர்க்கம் மனிதனின் மனதைவிட்டு மறை யாது” எனும் அந்த ஒற்றை வாக்கியத்தில் இறையியல் ரகசியம் அடங்கியிருக்கிறது. மார்க்சிய சிந்தனைப் பரவலை விடாது நடத்த வேண்டும். கூடவே உடனடி வேலை யாக மத நல்லிணக்கத்தை பேண வேண்டும். அவரவர் மதம் அவரவருக்கு, இதில் எதற்கு சச்சரவு? அதனால் யாருக்கு என்ன பயன்? ஆயிரத்தெட்டு பிரச்னைகள் நம்மை சூழ்ந்திருக்கின்றன. “ஐந்து ரூபாய்க்கு பிஸ்கெட் வாங்க யோசிக்கும் நிலையில் இந்தியப் பொரு ளாதாரம் இருக்கிறது” என்று பிரிட்டானியா கம்பெனிக் காரர் சொல்லுகிறார். மானம் போகிறது. ரிசர்வ் வங்கி ரிசர்வ் இல்லா வங்கி யானது! இவற்றில் கவனம் செலுத்துவோம். எதற்கு மதப் பகைமை? ஒருவேளை அதில் நமது கவனம் செல்லக் கூடாது என்று தான் இந்தக் கலவரமோ? மக்களை யோசிக்க வைக்கவே இந்த மாநாடு. சந்திப்பு: ஜி. செல்வா