சென்னை,அக்.22- மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாலிவுட் நடிகர், நடிகைகளுடன் மட்டும் பிரதமர் மோடி கலந்துரையாடியது குறித்து நடிகை குஷ்பு அதிருப்தி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்தி நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் இணைந்து மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு கொண்டாட் டத்தில் காந்திஜிக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியின் போது, மகாத்மா காந்தி யின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு 100 வினாடி கலாச்சார வீடியோ ஒன்றை பிரதமர் வெளியிட்டார். இந்த விழாவில் ஷாரூக் கான், அமீர்கான், சோனம் கபூர், கங்கணா ரணாவத், இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி, தயாரிப்பாளர் ஏக்தா கபூர், ரகுல் பிரீத்தி சிங், ஜாக்குலின், தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவருமே பிரதமர் மோடியுடன் படங்கள் எடுத்துக்கொண்ட னர். இவை சமூக வலைதளங்களில் வைரலாகின
இந்த நிகழ்ச்சியில் எந்த ஒரு தென்னிந்திய நடி கரும் கலந்து கொள்ளவில்லை. இதற்கு ராம்சர ணின் மனைவி உபாசனா தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். அவரை தொடர்ந்து குஷ்பு தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- இந்திய சினிமாவின் சார்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அனைவருக்கும் என் வணக் கங்கள். ஆனால், பிரதமருக்கு ஒன்று நினைவூட்ட விரும்புகிறேன். இந்தி திரைப்படங்கள் மட்டுமே நமது தேசத்தின் பொருளாதாரத்துக்கு பங்காற்ற வில்லை.
நம் தேசத்தின் பிரதிநிதியாக இல்லை. தென் னிந்திய சினிமாதான் மிகப்பெரிய பங்களிக்கிறது. தென்னிந்திய சினிமாதான் நமது தேசத்துக்கு தேசிய அளவில் பிரதிநிதியாக இருக்கிறது. சிறந்த திறமை கள் எல்லாம் தென்னிந்தியாவில்தான் உள்ளன. மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்கள் தென்னிந்தியா வில் இருந்துதான் வருகிறார்கள். இந்தியாவின் சிறந்த நடிகர்கள் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் தான். சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் தென்னிந் தியர்கள்தான். பிறகு ஏன் தென்னிந்திய சினிமாவி லிருந்து யாரும் அழைக்கப்படவில்லை. ஏன் இந்த பாரபட்சம்? தென்னிந்திய சினிமாவை நமது தேசத்தின் பெருமையாக உயர்த்திய எனது முன்னோடிகளும், ஆசான்களும் அழைக்கப்பட்டு, இதே மரியாதை காட்டப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் என்று நான் நினைக்கிறேன். பிரதமர் இந்த விஷயத்தைக் கவ னிப்பார் என்று எதிர் பார்க்கிறேன். இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.