மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மனித உரிமைக்குழு சார்பில் தமிழ்நாடு காவல் துறை இயக்குனர் ஜெ.கே. திரிபாதியை சந்தித்து மாநிலம் முழுமையும் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்கள், சாதி ரீதியான தாக்குதல்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மீதான தாக்குதல்கள், காவல் துறை அத்து மீறல்கள் ஆகியன குறித்த மகஜரை உ. வாசுகி (மத்தியக் குழு உறுப்பினர்) ஜி.செல்வா (கன்வீனர், மனித உரிமைக் குழு) ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் அளித்தனர். அம் மகஜரில் தமிழகத்தில் மனித உரிமைகளுக்கும், மனித மாண்புகளுக்கும் எதிராக நடைபெறுகிற நிகழ்வுகளைக் குறிப்பிட்டு உடனடி தலையீட்டையும் உறுதி செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. மகஜரைப் பெற்றுக் கொண்ட டி.ஜி.பி இது குறித்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
அசோக் படுகொலை
நெல்லையில் படுகொலையான அசோக்கின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகள் அனைவர் மீதும் தாமதமின்றி குற்றப் பத்திரிக்கை செய்யப்பட வேண்டுமென்றும், கொலை வழக்கை விரைந்து நடத்த வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. சாதி ஆதிக்க சக்திகள் அளித்த பொய்ப் புகார் அடிப்ப டையில் வாலிபர் சங்க ஊழியர்கள் 6 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டு மென்றும் வலியுறுத்தப்பட்டது. இது போன்று மோதல் சூழ்நிலை உள்ள இடங்களில் காவல் துறையில் பாரபட்சமாக செயல்படுபவர்கள் விசாரணை பொறுப்பு களில் நியமிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது.
சிறப்பு பிரிவு செயல்பாடு
சாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொள்ளும் தம்பதிகள் மிரட்டலுக்கு ஆளாவது, தாக்கப்படுவது, கொலை செய்யப்படுவது ஆகிய குற்றங்கள் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளன. சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மாவட்டங்கள் தோறும் சிறப்பு பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறி விக்கப்பட்டது. அவற்றின் செயல்பாடுகள் பற்றிய ஆய்வு தேவை என்றும், சிறப்பு பிரிவிற்கு ஒரு கட்டணமில்லா தொலைபேசி (Toll Free No) எண் தரப்படுவது அவசியம் எனவும், சிறப்பு பிரிவு பற்றிய தகவல்கள் பரவலாக விளம்பரம் செய்யப்பட வேண்டுமென்றும், கடமையாற்றுவதில் தவறு இழைப்போர் மீது தாமத மின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கிராமங்களில் தீண்டாமையின் பல்வேறு வடிவங்கள் இன்றைக்கும் நிலவுகின்றன. காவல் துறை கவனம் போதுமானதாக இல்லை. உள்ளூரில் நடக்கக்கூடிய இத்தகைய கொடு மைகள் குறித்து காவல்துறை மௌனம் சாதிப்பது அல்லது அதிகபட்சம் சமாதான கமிட்டி போடுவது என்ற நிலை மாற்றப்பட்டு உறுதியான தலையீடுகள் அவசிய மாகின்றன.மகஜரில் மத நல்லிணக்கம் பற்றியும் வலியுறுத்தப் பட்டுள்ளது. மதவெறி சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் காவல்துறை பாரபட்சம் இல்லாமல் கடுமையான நட வடிக்கை எடுத்து பொது அமைதியை காப்பாற்ற வேண்டும்.
கந்து வட்டி தற்கொலைகள்
தமிழகத்தில் அண்மைக் காலத்தில் கந்து வட்டி தற்கொலைகள் அதிகரித்துள்ளன. ஏழை எளிய நடுத்தர குடும்பங்கள் பல கந்து வட்டிக் காரர்களின் மிரட்டலுக்கு ஆளாவதும், அவமானப் படுத்துவதும் நடந்தேறுகின்றன. கந்து வட்டிக் காரர்கள் உள்ளூர் பிரமுகர்களாக, அரசியல் பின்புலம் உள்ளவர்களாக இருப்பதால் காவல் துறையை அணுகுவதிலும் சாதாரண மக்களுக்கு தயக்கம் ஏற்படுகிறது. இதன் விளைவே தற்கொலைகள். கந்து வட்டி ஒழிப்பு சட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதும், பாதுகாப்பு கோரி அணுகுபவர்களுக்கு உரிய நம்பிக்கையும் தர வேண்டும். காவல் நிலைய மரணங்கள், என்கவுண்ட்டர் போன்ற குற்றச் சாட்டுகள் காவல்துறை மீது தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. முதுகுளத்தூர் காவலில் இருந்த மணிகண்டன் (வயது 27) மரணம், காட்டு மன்னார்குடி நிலையத்தில் வினோத் மரணம், அண்மையில் ரவுடி என்ற முத்திரையோடு காவல்துறை நடத்திய என்கவுண்ட்டர் போன்ற நிகழ்வுகள் மக்கள் மத்தியில் சந்தேகங்களை, கண்டனங்களை எழுப்பியுள்ளன. இதில் பாரபட்சமற்ற விசாரணைகள் நடத்தப்பட்டு நட வடிக்கைகள் உறுதி செய்யப்பட வேண்டும். ரயில் நிலையங்களில் நடந்தேறிய இரண்டு அதிர்ச்சி கொலைகள், கண்காணிப்பு ஏற்பாட்டில் உள்ள இடை வெளிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. பொது மக்களின் அதிக பயன்பாட்டிற்கான இடங்களி லேயே இத்தகைய பலவீனங்கள் நீடிப்பது இத்தகைய குற்றங்களுக்கு சாதகமாகி விடும். முறையான இடை வெளிகளில் பாதுகாப்பு தணிக்கை (Security Audit) நடத்தப்பட்டு அதன் செயல் திறன் சோதனைக்கு ஆளாக்கப்பட வேண்டும்.
பெண்கள்- குழந்தைகள் மீதான வன்முறைகள்
பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதனைத் தடுப்பதற்கான காவல்துறை கண்காணிப்பு குழு (Police Advisory Committee) கடந்த காலங்க ளில் குறைந்தபட்சம் சென்னையிலாவது அமைக் கப்பட்டு அதற்கான கூட்டங்கள் நடந்துகொண்டிருந் தன. அனைத்து மாவட்டங்களிலும் இத்தகைய கமிட்டி யை அமைப்பதற்கும் பெண்கள் பிரச்சனைகளுக்காக களத்தில் இறங்கி போராடுகிற அமைப்புகளின் பிரதிநிதிகளை இதில் இணைக்கவும் வேண்டும். குழந்தைகள் மீதான பாலியல் வல்லுறவு மற்றும் துன்புறுத்தல்களை கட்டுப்படுத்துவதற்கான போக்சோ சட்டம் குறித்து பல மட்டங்களில் உள்ள காவல் துறையினருக்கு வகுப்புகள், பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியை காவல் நிலை யத்திற்கு வரவழைப்பது, சீருடை அணிந்த காவலர்கள் விசாரிப்பது உள்ளிட்ட மீறல்களை தடுப்பது அவசியம். மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் சிறுமியர் மீதான பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. காஞ்சிபுரம், தருமபுரி பெண்ணாகரம், விருத்தாசலம், ஓரத்த நாடு, விருதுநகர், நேற்று மயிலாடுதுறை போன்ற இடங்களில் காவல்துறையின் அலட்சியப் போக்கே நீதி கிடைப்பதற்கு தடையாக நிற்கிறது.
போக்குவரத்து காவல் துறையினர் அவர்களது கடமையை அமலாக்குகிற பெயரில் உயிருக்கே ஆபத்து விளைவிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடு வது அதிர்ச்சி தரத் தக்கதாகும். லத்தியை சக்கரங்க ளுக்குள் செலுத்துவது, வேகமாக கடக்க முனைவோரை சட்டையை பிடித்து இழுப்பது, லத்தியை முதுகில் எறிந்து நிறுத்த முயற்சிப்பது விபத்துக்களுக்கு வழிவகுப்ப தாகும். சமூக வலைத் தளம் வாயிலாக வரும் தகவல்களை பின் தொடர்ந்து குற்றங்களை தடுப்பது என்பதற்கு முறையான ஏற்பாடுகள் தேவை. சமூக ஆர்வலர்கள், செயல்பாட்டாளர்கள், மாற்றுக் கருத்துக்களை முன் வைப்பவர்கள் இழிவு செய்யப்படுவ தும், மிரட்டப்படுவதும் நடந்தேறுகிறது. அதன் மீதான புகார்களில் காவல் துறையின் தாமதம் இது போன்ற செயல்களை செய்பவர்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. பொதுவாக மனித உரிமை பிரச்சனைகளில் சட்டப்படி நடவடிக்கை எடுக்காத காவல்துறை யினர் மீது இபிகோ 166 ஏ பிரிவின் கீழ் நடவடிக்கை எடுப்பது அவர்களை முறைப்படுத்துவதற்கு உதவும். இது மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை உருவாக்க உதவும்.
டி.ஜி.பி உறுதி
இம் மகஜரைப் பெற்றுக் கொண்ட காவல் துறை இயக்குநர் இப் பிரச்சனைகளில் உரிய முறையில் தலையிடவும், நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்ட மட்டங்களில் உள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தவும் உறுதி அளித்தார்.