மண்ட்சார்,டிச.4- நாளுக்கு நாள் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ வெங்காயம் விலை 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது.இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் பயிரி டப்பட்டிருந்த முப்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான வெங்காயத்தை சிலர் திருடி சென்றுவிட்டதாக விவசாயி ஒருவர் புகார் அளித்துள்ளார். மத்தியப்பிரதேசம் மாநிலம் மண்ட்சார் மாவட்டம் ரிச்சா கிராமத்தில் ஜிதேந்திர குமார் என்ற விவசாயி தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் வெங்காயத்தை பயி ரிட்டிருந்தார். ஒருசில நாட்களில் அறுவடை செய்யப் படவிருந்தது. இந்நிலையில் அடையாளம் தெரியாதவர்கள் வெங்காயத்தை செடியில் இருந்து பறித்து திருடிச்சென்று விட்டதாக காவலர் விசாரணை நடத்தி வருகின்றனர்.