சென்னையில் நடைபெற்ற விழாவில் டாக்டர் அலெய்டா குவேராவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சால்வை அணிவித்து நினைவுப் பரிசை வழங்கினார். அருகில் தலைவர்கள்.
புரட்சியாளர் சேகுவேராவின் புதல்வி மருத்துவர் அலெய்டா குவேரா, பேத்தி எஸ்டெஃபானி குவேரா ஆகியோருக்கு மாபெரும் வரவேற்பு மற் றும் சோசலிச கியூபாவிற்கு தமிழ்நாட்டு மக்களின் பேராதரவைத் தெரிவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி புதனன்று மாலை சென்னையில் பெரும் உற்சாகத்துடன் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டுக்குழு இணைந்து இந்த நிகழ்வை நடத்தின. நிகழ்விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி னார். ஒருமைப்பாட்டுக்குழுத் தலைவர் எம்.ஏ.பேபி, சிபிஎம் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக துணைப்பொதுச் செயலாளர் கனி மொழி எம்.பி., சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மமக சார்பில் பெர.ஹாஜாகனி, மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் வந்தியத்தேவன், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் என். குணசேகரன், சு.வெங்கடேசன் எம்.பி., மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்தரராஜன் (வடசென்னை), ஆர்.வேல்முருகன் (தென் சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை), ஒருமைப் பாட்டுக்குழு ஒருங் கிணைப்பாளர்கள் ஐ.ஆறுமுகநயினார், சசிகுமார் உள்ளிட்டு ஏராளமானோர் கலந்து கொண்டனர்.