புதுதில்லி, ஜூன் 12 - குஜராத் மாநிலம் போர்பந்தர் மற்றும் டையூ இடையே வியாழன் காலை வாயு புயல் கரையை கடக்க உள்ளது. தென்மேற்கு பருவமழை ஜூன் 8-ம் தேதி தொடங்கி யது. அதன் தொடர்ச்சியாக அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. அரபிக்கடலில் உருவான இந்த புயலுக்கு ‘வாயு’ என்று பெயர் சூட்டப்பட்டது. வாயு புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு: வாயு புயல், அதிதீவிர புயலாக மாறி வியாழக்கிழமை காலை குஜராத் மாநிலம் போர்பந்தர் - டையூ பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 145 கி.மீ முதல் 170 கி.மீ வரை இருக்கக் கூடும்.
3.5 லட்சம் பேர் வெளியேற்றம்
இதையடுத்து குஜராத் மாநிலத்தில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. புயலை எதிர்கொள்வதற்காக ராணுவம், தேசிய பேரிடர் மீட்புக் குழு, கடலோர காவல்படையினர் அங்கு விரைந்துள்ளனர். கடலுக்கு மீன்பிடிக்க சென்றி ருந்த மீனவர்கள் உடனே திரும்பும்படி தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. வாயு புயல் தாக்கும் போது அதன் சீற்றம் காரணமாக கச்சி, கீர், சோம்நாத், போர்பந்தர், அம்ரேலி, ஜூனாகர், பவ்நகர், துவாரகா, ஜக்கம்நகர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள சுமார் 300 கிராமங்கள் பாதிக்கப் பட வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேற்கண்ட மாவட்டங்களில் இருந்து குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 3.5 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற் றம் செய்ய குஜராத் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.