தஞ்சாவூர், ஆக.5- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், இந்தியக் குடியரசுத் தலைவ ருக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மூலம் கோரிக்கை மனு அனுப்பப் பட்டுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் என்.வி.கண் ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில் குமார், மாவட்ட துணைத் தலைவர் கே.முனியாண்டி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் (சிபிஐ) வீரமோகன், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், மாவட்ட நிர்வாகி கே.அன்பு ஆகியோர் திங்க ளன்று தஞ்சை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறு கோரி அளித்த கோரி க்கை மனுவில் கூறியிருப்பதாவது: “விவசாயிகள் கடுமையான விவ சாய நெருக்கடியில் சிக்கி தவிக்கிறார் கள். விவசாய உற்பத்தி செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு குறைந்தபட்ச கட்டுப்படியான விலை கிடைக்காமல் அவதியுறுகின்றனர். இதனால் விவசாய தொழில் நடை முறை சாத்தியமற்றதாகி விவசாயி கள் கடன் சுமையில் தள்ளப்பட்டு விரக்தியில் தற்கொலைக்கு வலுக் கட்டாயமாக தள்ளப்படுகின்றனர். 1995க்குப் பிறகு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல்வேறு விவசாய சங்க அமைப்புகளின் தலை வர்கள் தங்களை சந்தித்த பொழுது, அந்தக் குழுவிடம் உங்கள் மேன்மை பொருந்திய அதிகாரத்தைப் பயன் படுத்தி விவசாயிகள் விடுதலை சட்டத்தை, அதாவது கடன் தொல்லை யிலிருந்து விவசாயிகள் விடுதலைச் சட்டம்- 2018 மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆத ரவு விலையை விவசாயிகளுக்கு உத்தரவாதம் செய்யும் சட்டம் 2018 ஆகியவற்றை அமுல்படுத்த நட வடிக்கை எடுப்பதாக தாங்கள் உறுதியளித்து இருந்தீர்கள். இந்த மசோதாக்கள் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற விவசாயிகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் ராஜூ ஷெட்டியாலும், மாநிலங்கள வையில் கே.கே. ராகேஷாலும் தனி நபர் மசோதாவாக அறிமுகப்படுத்தப் பட்டது. நாடு முழுவதும் ஆயிரக்க ணக்கான விவசாயிகள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாக ஆர்ப்பாட்டம் நடத்தி தங்கள் தலை யீடு கோரி இந்த மனுவை தங்களுக்கு அனுப்பியுள்ளோம் தயவு செய்து தாங் கள் உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறோம்” எனக் கூறப்பட்டுள் ளது.