tamilnadu

தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

நவ.2-ல் நாட்டுப் படகு மீனவர்கள் போராட்டம்

தஞ்சாவூர், அக்.28- தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே உள்ள 34 மீனவ கிராமங்களைச் சேர்ந்த, நாட்டுப்படகு மீனவர்கள் நலச்சங்க கூட்டம், சோமநாதன்பட்டினம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் நலச் சங்கத் தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். பத்மநாதன், சந்திரசேகர், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவாக சங்க பொருளாளர் பழனிவேலு நன்றி கூறினார்.  இக்கூட்டத்தில், “தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்யும் விசைப்படகு உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பலமுறை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். எனவே, மீன்வளத் துறை அதிகாரிகளைக் கண்டித்தும், தடையை மீறி அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித் தொழில் செய்து வரும் விசைப் படகுகளை நவம்பர் 2-ஆம் தேதி நடுக்கடலில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.  இதில் 500 க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் சென்று மீனவர்கள் கலந்து கொள்வது. கடல் வளத்தையும், பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இரட்டை மடி வலை பயன்படுத்தும் விசைப்படகு மீனவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்” எனவும் தமிழக அரசை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

அபாயகரமான ஆழ்துளை கிணறு மூடல்

தஞ்சாவூர், அக்.28- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஆத னூரில் தொடக்கப் பள்ளி யில், குடிநீருக்காக தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணறு பாதுகாப்பில்லாமல் இருந்ததை அடுத்து, பட்டுக்கோட்டை சார் ஆட்சிய ரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உடனடியாக ஆழ்துளைக் கிணறு மூடப் பட்டது. பேராவூரணியை அடுத்த ஆதனூர் கிராமத்தில் உள்ள புனித அன்னாள் தொடக்கப் பள்ளி அருகில் பேரூராட்சி நிர்வாகத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆழ்துளைக் கிணறு அமைக் கப்பட்டது. ஆனால் தண்ணீர் இல்லாத காரணத் தால் அந்த கிணறு கைவிடப் பட்டது. ஆழ்துளைக் கிணறு எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் திறந்தவெளியில் காணப்பட்டது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் நிகழ்ந்த சம்பவம் போல், ஆத னூரிலும் நிகழ வாய்ப்புள்ள தாக சமூக ஆர்வலர்கள் சிலர் பட்டுக்கோட்டை சார் ஆட்சியரின் கவனத்துக்கு இந்த ஆழ்துளை கிணற்றை படத்துடன் எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பினர். உடனடியாக சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், வரு வாய்த்துறை மூலம் பாது காப்பற்ற நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றை மூட உத்தரவிட்டார்.  இதையடுத்து உடனடி யாக தீபாவளி அன்று ஆழ்துளைக் கிணறும் மூடப்பட்டது.  இந்த நடவடிக்கைக்கு பட்டுக்கோட்டை உதவி ஆட்சியருக்கு ஆதனூர் கிராம மக்கள் நன்றியை தெரி வித்துக் கொண்டனர்.