tamilnadu

தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர் முக்கிய செய்திகள்

காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்க ஆலோசனைக் கூட்டம் 
தஞ்சாவூர், ஜூலை 18- காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஒன்றிய அளவிலான ஆலோசனைக் கூட்டம், தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியம் ஊரணிபுரத்தில் புதன்கிழமை நடை பெற்றது. திமுக ஒன்றியச்செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான கே.டி.மகேஷ் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். காங்கிரஸ் வட்டாரத் தலைவர் முத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் கோவிந்தராஜூ, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஒன்றி யச் செயலாளர், திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்க ஒன்றியச் செயலாளர் வி.கே.சின்னத்துரை ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க(சிபிஎம்) மாவட்டச் செய லாளர் என்.வி.கண்ணன், நிர்வாகிகள் கே.ராமசாமி, ரெ. கோவிந்தராசு, சி.சந்திரபோஸ், த.மதியழகன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.வாசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க(சிபிஐ) மாவட்டத் தலைவர் வீர.மோகன், சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் முத்து.உத்திராபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் கே.எம்.ராமசாமி நன்றி கூறினார்.  கூட்டத்தில், “காவிரிப் படுகையில் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி வரும் ஜூலை 23-ம் தேதி தஞ்சையில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபெற உள்ள பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு, திருவோணம் பகுதியில் இருந்து 1000 விவசாயிகளை பங்கேற்கச் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மின் உற்பத்திக்கான பன்னாட்டு கருத்தரங்கு 
திருச்சிராப்பள்ளி, ஜூலை 18- ஜீகோ எனர்கான் நிறுவனத்தின் ஏழாவது பன்னாட்டு கருத்தரங்கம் திருச்சியில் 2 நாட்கள் நடைபெறுகிறது. கருத்தரங்கின் முதல் நாளான வியாழனன்று நடைபெற்ற கூட்டத்திற்கு நெய்வேலி பவர் கம்பெனி பிளான்ட் பொது மேலாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஜீகோ மற்றும் பல்வேறு மின் உற்பத்தி நிறுவனங்களை சேர்ந்த பொறியாளர்கள், மிகை மின் உற்பத்திக்கான புதிய தொழிற்நுட்பம் என்ற தலைப்பில் ஏர்ப்ரீஹீட்டர் மற்றும் எலக்ட்ரோஸ்டேடிக் ப்ரிசிபிடேட்டர்-ல் புத்தமைப்பும், புர னாக்கமும் கூட்டி தக்க பராமரிப்பு பணிகளை செய்து வர வேண்டிய அவசியத்தை விளக்கி பேசினர். முன்னதாக ஜீகோ எனர்கான் நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜ கோபால் வரவேற்றார். இயக்குனர் குணசேகரன் நன்றி கூறி னார்.

மன்னார்குடி வட்டம் தொடர்ந்து திருவாரூர் உடனே இருக்க வேண்டும் நுகர்வோர் சங்கம் கோரிக்கை 
மன்னார்குடி, ஜூலை 18- மன்னார்குடி நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாது காப்பு சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் ச.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சா.சம்பத் வரவேற்றார்.  கூட்டத்தில், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டால் மன் னார்குடி வட்டம் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்திலேயே இருக்க தமிழக அரசை வலியுறுத்துகிறது. மன்னார்குடி நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பழுதான சாலை யினை உடன் செப்பனிட வேண்டும். மன்னார்குடியில் திருவாரூர் பேருந்து நிறுத்தத்தில் கடைகளை ஒழுங்கு படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. பொருளாளர் சா.நவநீத கிருஷ்ணன் நன்றி கூறினார். கூட்டத்தில் ம.பத்மநாபன், டி.இளங்கோவன், ம.இராமசாமி, சா.பிச்சைக்கண்ணு மற்றும் சங்க உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.