வி.தொ.ச ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், ஆக.13- கொரோனா காலத்தில் ரேசன் கடை களில் இலவசமாக வழங்கி வந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தொடர்ந்து விலையின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வெள் ளிக்கிழமை அன்று தஞ்சை மாவட்டத்தில் 150 இடங்களில் ரேசன் கடைகள் முன்பு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெறும் என சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் கே.பக்கிரிசாமி தெரிவித்துள்ளார். மாநிலச் செயலாளர் எம்.சின்னத்துரை திருவையாறு ஒன்றியத்திலும், மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி திருவிடை மருதூரிலும், மாவட்டத் தலைவர் ஆர். வாசு பேராவூரணியிலும் மற்ற நிர்வாகி கள் வெவ்வேறு இடங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
முறைகேடு புகார்
பொன்னமராவதி, ஆக.13- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதி ஒன்றியம் அம்மன்குறிச்சி ஊராட்சி யில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜன கிராமின் வீடு கட்டும் திட்டத்தில் முறை கேடு புகார் எழுந்துள்ளது. அவ்வூராட்சி மக்களில் சிலர், தமிழக முதல்வர் மற்றும் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், இத்திட்டத் தில் வீடு கட்ட எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை முறைகேடாக கையாடல் செய்த அம்மன்குறிச்சி ஊராட்சி கிளார்க் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
10 வயது சிறுவன் அடமானம்
கும்பகோணம், ஆக.13- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ராஜகிரி கிராமத்தில் 10 வயது சிறு வன் கொத்தடிமையாக ஆடு மேய்த்துக் கொண்டு இருப்பதாக சைல்டு லைனுக்கு புகார் வந்தது. இதையடுத்து அங்கு சென்ற சைல்டு லைன் இயக்குநர் பாத்தி மாராஜ், தாசில்தார் கண்ணன் உள்ளிட்ட குழுவினர் சிறுவனை மீட்டனர். அச்சிறுவன், புதுக்கோட்டை மாவட் டம், கறம்பக்குடி அடுத்த வெள்ளைசாமி என்பவரின் மகன் என்பது தெரிய வந்தது. வெள்ளைசாமிக்கு அந்தச் சிறு வன் உட்பட நான்கு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர் என்றும் அவரது மனைவி இறந்த பிறகு, 2017ல் ராமநாத புரத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரி டம், ஒப்பந்த அடிப்படையில் ஆடு மேயக்க சிறுவனை 40 ஆயிரம் ரூபாய்க்கு அட மானம் வைத்திருந்தார் என்பதும் தெரிய வந்தது. இதைதொடர்ந்து முருகானந் தத்தின் மீது வழக்கு பதிந்து காவல்துறை யினர் தேடி வருகின்றனர்.
மீனவர்கள் கோரிக்கை
தஞ்சாவூர், ஆக.13- டீசல் மானியம் கேட்டு விண்ணப்பித்த மீனவர்களுக்கு, உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில மீனவர் பேரவை பொதுச்செயலாளர் மல்லிப்பட்டினம் ஏ.தாஜுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், தமிழக முதல மைச்சருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, தஞ்சை மாவட்டத்தில் புதிதாக வாங்கப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு டீசல் மானியம் பெற உரிய விண்ணப்பங்கள் கொடுத்தும் இதுவரை மானியம் வழங்கப்படாமல் உள்ளது. டீசல் விலை மிகவும் அதிகரித் துள்ளதால் மீன்பிடித் தொழில் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப் பட்டு, வாழ்வாதாரம் இழந்து தவித்து வரு கின்றனர். எனவே, விண்ணப்பித்த அனை வருக்கும் டீசல் மானியம் விரைவாக வழங்கி உதவிட வேண்டும். முழு ஊர டங்கு நாளான ஞாயிற்றுக்கிழமைகளி லும், கடலுக்கு சென்று மீன் பிடிக்க அனு மதி வழங்க வேண்டும் உள்ளிட்டவை மனு வில் கூறப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை
நாகப்பட்டினம், ஆக.13- 100 நாள் வேலையைப் பாகுபாடு இல்லாமல் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும்; ஊரடங்கு காலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.5,000- நிவாரணம் வழங்க வேண்டும் உள் ளிட்டவை வலியுறுத்தி, நாகை மாவட்டம் புஷ்பவ னத்தில், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் வேதாரணியம் வட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. பேரவைக்கு மாவட்டத் துணைத் தலைவர் அ.சிக்கந்தர் தலைமை வகித்தார். கீழையூர் ஒன்றியச் செயலாளர் என். பன்னீர்செல்வம் மற்றும் ஆர்.சண்முகம், பாலமுரு கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம்
பொன்னமராவதி, ஆக.13- மின்சார சட்டத் திருத்த மசோதாவை கை விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பின் சார்பில் பொன்னமராவதி உதவி மின் செயற்பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு திருமயம் கோட்டத் தலைவர் ஆர்.ஜெயக்குமார் தலைமை வகித்தார். தொ.மு.ச திருமயம் கோட்டச் செயலாளர் ஏ.ராஜேந்திரன், தொழிலா ளர்- பொறியாளர் ஐக்கிய சங்க கோட்டத் தலை வர் ஏ.அடைக்கலராஜ், செயலாளர் கே.எம்.செந் தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.