தஞ்சாவூர், மே 24-தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில் ஆதரவற்ற 3 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் துணைத்தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார். செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிராம்பட்டினம் முகமது ஹசன் ஆலிம் சார்பில் தையல் இயந்திரங்கள் மற்றும் நாற்காலிகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் எம்.இசட் அப்துல் மாலிக், பேராசிரியர் நசுருதீன், ஏ.முகமது முகைதீன், எம்.நிஜாமுதீன், எம்.ஏ.அப்துல் ஜலீல், எஸ்.முகமது முகைதீன் கலந்து கொண்டனர்.