தஞ்சாவூர்: தஞ்சா வூர் மாவட்டம், பேரா வூரணி அருகே உள்ள பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 40 மாணவர்க ளின் குடும்பத்திற்கு ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள அரிசி, மளிகைப் பொ ருட்கள் வெள்ளிக்கிழமை நிவாரணமாக வழங்கப் பட்டது. பள்ளியின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வரும் செ.இராமநாதன். இவர் தன் முகநூல் நண்பர்களான கோவை ஆக்கம் பவுண்டேசன் மற்றும் துபை பொறியாளர் ரவி சொக்கலிங்கம் ஆகியோரின் உதவியுடன், ஒன்றியக்குழு உறுப்பினர் பாக்கியம் முத்துவேல், பாலத்தளி பள்ளி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் இவற்றை மாணவர்களின் பெற்றோர்களிடம் வழங்கினார்.