கும்பகோணம், பிப்.29- தில்லியில் குடியுரிமை சட்டத்தி ற்கு எதிராக போராடிய அப்பாவி மக்கள் மீது வன்முறையை கட்ட விழ்த்து விட்டு 30-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நீதிமன்றம் முன்பாக பாசிசத்துக்கு எதிரான அனைத்துக் கட்சி வழக்கறிஞர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பா ட்டத்திற்கு விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட வழக்கறிஞர் அணி பால சுப்பிரமணியன் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் வழக்கறி ஞர்கள் ராவணன், சரவணப் பாண்டி யன், நிம்மதி, ஆனந்தராஜ், ஸ்டாலின், ஜெயபாண்டியன், குருமூர்த்தி, தொல்குடி, கார்த்திக், ஜமுனா ராஜ், மொரார்ஜி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். தரங்கம்பாடி: நாகை மாவட்டம் பொறையாறு அருகே ஆயப்பாடி யில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. வட்டத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். சங்கத்தின் முன்னாள் மாநிலத் துணை தலைவர் ஏ.ரவிச்சந்திரன், வட்ட செயலாளர் கே.பி மார்க்ஸ், மனிதநேய கட்சி மாவட்ட செயலா ளர் ஜாகிர் உசேன், வாலிபர் சங்க வட்ட துணை செயலாளர் பவுல் சத்ய ராஜ், வட்ட பொருளாளர் சாமிதுரை, சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் பஷீர் அகமது, விவசாயத் தொழிலாளர் சங்க வட்ட செயலா ளர் காபிரியல், ஆயப்பாடி முஜிபூர் ரகுமான் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் கூத்தூர், எடுத்துக்கட்டி சாத்தனூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஜமாத்தார்கள், வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.