tamilnadu

பெண் ஊராட்சித் தலைவரை  தாக்கியவர்களை கைது கோரி மறியல்

  கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மேலசெம்மங்குடி மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் இந்திராணி (வயது 50). இவர் மேல செம்மங்குடி ஊராட்சி தலைவராக இருந்து வருகிறார். ஊராட்சி அலுவலக கட்டிடம் பழுதடைந்து இருப்பதாக கூறி அலுவலகத்தை கோடுக்கிளி பகுதியில் உள்ள சேவை மையத்திற்கு மாற்றுவது தொடர்பாக வார்டு உறுப்பினர்களுடன்  கலந்து ஆலோசித்தாக கூறப்படுகிறது. இதில் வார்டு உறுப்பினரான தென்னரசு ஊராட்சி அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தாராம். இதில் தலைவருக்கும் தென்னரசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த தென்னரசு, தலைவர் இந்திராணி, அவருடன் வந்திருந்த அவரின் மகன் இளையராஜா என்பவர் மீதும் தாக்குதல் நடத்திய தாக கூறப்படுகிறது. இதில் இருவரும் காயமடைந்து தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இது குறித்து மெலட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதில் விசாரணையை தாமதபடுத்துவதாக கூறியும், தாக்கியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி பாபநாசம் திருக்கருக்காவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.