கும்பகோணம், ஜூலை 24- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்களுக்கு 93843 47571 என்ற எண்ணில் இருந்து உங்களின் மகன்கள், மகள்கள் தேர்வில் வெற்றி பெற்று உள்ளனர் என்று தகவல் தெரிவிக்கின்றனர். அப்போது பெற்றோர்களிடம், நாங்கள் அரசு நிறுவனம் சார்ந்த போட்டித் தேர்வுகளுக்கும் மேற்படிப்பிற்கும் பயிற்சி கொடுத்து, ஊக்கத்தொகை பெற்றுத் தந்து 100 சதவீத அரசு வேலை வாங்கி தருகிறோம் என தொலைபேசி மூலம் ஆசை வார்த்தைகளை கூறி வர வைக்கின்றனர். இந்நிலையில் சிலர் தொலைபேசியில் அழைத்த நிறு வனங்களுக்கு சென்றால், அங்கு மேலும் சில ஆசை வார்த்தை களை சொல்லி ரூபாய் ஆயிரம் முதல் தொடங்கி பணம் பறிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதாக பெற்றோர் கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகள், பள்ளி படிப்பு முடிந்து இரண்டு-மூன்று ஆண்டுகள் ஆன பிறகும், அதே பாணி யில் ஏமாற்றும் நோக்கில் தொலைபேசியில் பெற்றோர்களிடம் பேசி வருகின்றனர். இதுகுறித்து பெற்றோர் ஒருவர் கூறுகையில், எனது பிள்ளைகள் படிப்பை முடித்து பல ஆண்டுகள் ஆனபிறகும், எனது நம்பருக்கு போன் செய்து சில ஆசை வார்த்தைகளை கூறி பல சலுகைகளை பெற்றுத் தருவதாகவும் எங்கள் பயிற்சி நிலையத்தில் படித்தால் உடனே அரசு வேலை வாங்கித் தரு வதாகவும் கூறி வருகின்றனர். இந்த தகவல் உண்மையா? இவர்களுக்கும் கல்வி துறைக்கும் தொடர்பு உள்ளதா? இந்த மாதிரியான தகவலை பரிமாற்றம் செய்ய பெற்றோர்களின் தொலைபேசி எண்ணை கொடுப்பது யார் யார்? பள்ளி கல்வி துறை அமைச்சர் அதிகாரி களுக்கு இது தெரிந்து நடக்கிறதா? இல்லை இவர்களின் பெயரை வைத்து ஏமாற்றும் வேலை செய்கிறார்களா? தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு, பெற்றோர்களுக்கு தெரியாத தகவல்கள் இந்த மாதிரியான நபர்களுக்கு எப்படி தெரிகிறது? என கேள்வி எழுப்பி வரு கின்றனர். மேலும் இத்தகைய ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் பெற்றோர்கள்- மாணவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, இதுபோன்ற நிறுவனங்களை கண்டறிந்து, பெற்றோர்களின் தொலைபேசி எண்ணை அனுமதியில்லாமல் தரும் கல்வி நிறுவனங்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். (ந.நி.)