தஞ்சாவூர் :தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக சமூக அறிவியல் துறை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து நடத்திய “வளர் இளம் பெண்களுக்கான உடல்நலம் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி” வெள்ளிக்கிழமை தஞ்சை மாநகராட்சிக்குட் பட்ட நீலகிரி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் துணைவேந்தர் முனைவர் கோ.பால சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. மகப்பேறு சிறப்பு மருத்துவர் ராதிகா மைக்கேல் சிறப்புரையாற்றினார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஞா.பழனிவேல், பள்ளி தலைமையாசிரியர் முனைவர் ப.மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர் மு.தஸ்னிம் ஆகியோர் பேசினர். முன்னதாக சமூக அறிவியல் துறைத் தலைவர் முனைவர் ச.சங்கீதா வரவேற்றார். உதவிப் பேராசிரியர் முனைவர் மா.அறிவானந்தன் நன்றி கூறினார்.