தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மார்ச் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மார்ச் 20 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தலைமையில் நடைபெறவிருந்தது. தமிழக அரசின் கொரோனா வைரஸ் தொடர்பான அரசாணை வெளியானதைத் தொடர்ந்தும், உலக சுகாதார இயக்கத்தால் பேரழிவாக அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நோய் கிருமி பரவுதலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை காரணமாக வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறுவதாக இருந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.