tamilnadu

உணவுப் பாதுகாப்புத் துறை  உரிமம் வழங்கும் முகாம் 

 தஞ்சாவூர், ஆக.22- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை உணவு பாதுகாப்பு பிரிவின் கீழ், உணவு வணிகர்களுக்கு உரிமம் மற்றும் பதிவுச் சான்று வழங்கும் முகாம் நெல்லை ஆரியபவன் விழா அரங்கில் நடைபெற்றது.  உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பேராவூரணி ஆர்.சுப்பிர மணி, பட்டுக்கோட்டை ஏ.ஐ.முத்துக்குமார் ஆகியோர் விண்ணப் பித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசுகையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உத்தரவின் பேரிலும், உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் அறிவுறுத்தலின் பேரிலும் முகாம் நடைபெறுகிறது.  இந்தியா முழுமைக்கும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. உணவு வணிகம் செய்பவர்கள், கட்டாயம் உணவு பாதுகாப்பு துறை யில் இருந்து உரிமம், பதிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். எனவே உணவுப் பொருள்கள் சார்ந்த பெட்டிக் கடை, மளிகைக் கடை, தேநீர்க் கடை, உணவகங்கள், குளிர்பானக் கடைகள், தண்ணீர் கேன் மற்றும் பாட்டிலில் குடிநீர் அடைத்து விற்பனை செய்ப வர்கள், பேக்கரி, இனிப்பகங்கள், ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் வியாபாரம் செய்பவர்கள், சமையல் தொழில் செய்பவர்கள், தெருவோரம் உணவு விற்பனை செய்பவர்கள், பழக்கடைகள், பால் வியாபாரம், இட்லி மாவு அரைத்து விற்பவர்கள், சத்துணவு, ஊட்டச்சத்து மையங்கள், திருமண மண்டபங்கள், மது விற்பனை மற்றும் பார்கள், கேண்டீன்கள் ஆகிய வியாபாரம் செய்யும் அனைவரும் உடனே பதிவு செய்து உரிமம் மற்றும் பதிவு சான்றி தழ் பெற வேண்டும்.  இம்முகாமில் பதிவு செய்யாதவர்கள் இ-சேவை மையங்களில், ஆன்-லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்” என்றனர்.  முகாமில் தொழிலதிபர் தீபம் ஆர்.நீலகண்டன், வர்த்தக் கழக பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி, சுப்பையன், நீலகண்டன், பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில், விண்ணப்பித்த 27 பேருக்கு பதிவுச் சான்று மற்றும் உரிமம் வழங்கப்பட்டது.