தஞ்சாவூர், ஜூன் 14- தஞ்சையில், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (பெஃபி) தமிழ்நாடு சார்பில், கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற் றது. ரயிலடியில் 50 ரயில்வே தூய்மைப் பணியாளர், வங்கி யில் பணிபுரியும் 10 தற்காலிக தூய்மைப் பணியாளர், மாதர் சங்க அலுவலகத்தில், 50 மாதர் சங்க தோழர்கள் குடும்பத்திற் கும், சிஐடியு சங்க அலுவலகத் தில் மாநகராட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 25 தூய்மைப் பணி யாளர், 10 கட்டுமான தொழிலா ளர், 5 மாற்றுத்திறனாளிகள் குடும் பங்கள் என மொத்தம் 150 பேருக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பிலான நிவா ரணப் பொருட்கள் வழங்கப்பட் டன.
நிகழ்வுகளில் சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் சி.ஜெய பால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் என்.குருசாமி, மாதர் சங்க தஞ்சை மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு ஆகியோர் முன்னிலை வகித்த னர். இந்திய வங்கி ஊழியர் சம் மேளன தஞ்சை மாவட்ட நிர்வாகி கள் இந்தியன் வங்கி சொக்க லிங்கம், சோமு, குமார், பாலச்சந் திரன், ராஜேந்திரன், நாராயணன், மனோகரன், சுப்ரமணியன், நித்யா, செண்பகலெட்சுமி, பாங்க் ஆப் பரோடா புவனா, தமிழ்நாடு கிராம வங்கி ஹர்சத், மகேஷ் ஆகி யோர் நிவாரணப் பொருட்களை வழங்கினர். இதன் ஏற்பாடுகளை சொக்கலிங்கம், சோமு, புவனா செய்தனர்.