தஞ்சாவூர், செப்.25- தஞ்சாவூர் வடக்கு வாசல் ஏ.ஒய்.ஏ.நாடார் சாலை எஸ்.ஈஸ்வரமூர்த்தி(19) மற்றும் கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரைச் சேர்ந்த கள்ளச்சாராய வியாபாரி சி.ராஜ் (47) ஆகிய இருவரையும் மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் பரிந்துரையின் பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சி யர் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.