தஞ்சாவூர், ஜூன் 6- அமெரிக்க கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் இனவெறி படுகொலையைக் கண்டித்து, தஞ்சாவூர் ரயிலடியில் சிஐடியு சார்பில், வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் என்.குருசாமி கண்டன உரையாற்றினார். சிஐடியு மாவட்ட தலைவர் து.கோவிந்தராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி, மாநகரச் செயலாளர் வசந்தி, வங்கி ஊழியர் சங்க (பெஃபி) மாவட்டத் தலைவர் சொக்கலிங்கம், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கோதண்டபாணி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் பாலசுப்பிரமணியன், ஆட்டோ சங்கம் ஜோசப், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் பி.என்.பேர் நீதி ஆழ்வார், கே.அன்பு, த.முருகேசன், இ.டி.எஸ்.மூர்த்தி, கே.கல்யாணி, எஸ்.செங்குட்டுவன், எஸ்.மில்லர் பிரபு, ராமலிங்கம், டாஸ்மாக் ஊழியர் சங்கம் மதியழகன், அரசு போக்குவரத்துக் கழகம் ராமசாமி, மின் ஊழியர் மத்திய அமைப்பு காணிக்கை ராஜ், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவர் மணிமாறன், துணைத் தலைவர் கண்ணன், பொருளாளர் ராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.