கும்பகோணம் டிச.5- அண்மையில் கன்னியா குமரியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான உப குழுவின் அறைகூவலின் படி இந்திய மாணவர் சங்கம் சார்பில் 5, 8 ம் வகுப்பு மாண வர்களுக்கு பொதுத் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்தி யும், குழந்தைகளுக்கு பொ துத்தேர்வு வைக்கும் தமிழக அரசை கண்டித்தும் அந்த நகலை சவுக்கால் அடிக்கும் போராட்டம் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்ட பள்ளி மாணவர் உபக்குழு துணைக் கன்வீனர் யு.சஞ்சீவ் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.அர விந்த்சாமி கண்டன உரை யாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் பிஅருண் குமார் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தமிழக அரசு அறி வித்த ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.