தஞ்சாவூர், பட்டுக்கோட்டை மனோரா பகுதியில் இன்று அதிகாலை வேன் ஒன்று சென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சேதுபாவாசத்திரம் அருகே மனோரா என்ற இடத்தில் இன்று அதிகாலை தூத்துக்குடியை சேர்ந்த 11 பேர் வேளாங்கண்ணிக்கு சென்றுக்கொண்டிருந்த வேன் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) சிறிய கால்வாய் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது.
இந்த விபத்தில் ஓட்டுநர் சின்னப்பாண்டி, பாக்யராஜ் (64), ஞானம்பாள் (60), ராணி (40), சின்னப்பாண்டி (40) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.7 வயது சிறுவன் உட்பட 7 பேர் படுகாயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர்களின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும்,
இந்த விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 மற்றும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்கமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்திரவிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பதினருக்கும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.