ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரே லிய ஓபன் டென்னிஸ் தொடர் ஞாயிறன்று நிறைவு பெற்றது.முன்னணி வீரர்கள் அனைவரும் பங்கேற்றதால் தொடக்கம் முதலே பரபரப்பாகத் தொடங்கிப் பரபரப்பாகவே நிறைவு பெற்றது. இந்த தொடர் தொடங்கும் தருணத்தில் அதாவது டென்னிஸ் தொடர் நடைபெற்ற பகுதியில் காட்டுத்தீ, காற்று மாசு போன்ற மிகப்பெரிய பிரச்சனை அதிகம் இருந்தது. தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்த பொழுது நிறைய வீரர் - வீராங்கனைகள் மயக்கத்துடன் ஓய்வு பெற்று பின்னர் விளையாடினர். தகுதி சுற்றுக்கே இந்த நிலைமை என்றால் மற்ற ஆட்டங்கள் நடக்குமா? கேள்வி எழுந்தது. உலக நாடுகளைச் சேர்ந்த வீரர் - வீராங்கனைகள் அதிகம் இருப்பதால் பிரச்சனையாகிவிடும் என்பதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் காற்று மாசுவை அதிரடியாகச் சமாளித்தது மட்டுமல்லாமல் வெளியில் தங்கும் வீரர் - வீராங்கனைகளுக்குச் சுவாச பிரச்சனை ஏற்படாமல் இருக்கத் தனிக் கவனம் செலுத்தியது. ஆஸ்திரேலிய டென்னிஸ் சங்கத்தின் துடிப்பான செயல் உலக விளையாட்டு அரங்கில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.