tamilnadu

img

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம், உதம்பூர் மாவட்டத்தில், பாட்டல் பட்டாலியன் பகுதியில் 187 பட்டாலியன் முகாம் அமைந்துள்ளது. அங்கு சிஆர்பிஎப் வீரர் அஜித் குமார் நேற்று இரவு பணியில் இருந்தார். அப்போது, அவருக்கும் சகவீரர்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.


இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில், சகவீரர்கள் 3 பேரை திடீரென அஜித் குமார் துப்பாக்கியால் சுட்டார். இதில் 3 வீரர்களும் பலியானார்கள். அதன்பின் பதற்றமடைந்த அஜித் குமார், தன்னை சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.


இதையடுத்து, அங்கு பாதுகாப்பில் இருந்த மற்ற வீரர்கள் அஜித் குமாரை மீட்டு ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அஜித் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இது குறித்து சிஆர்பிஎப் கமாண்டர் ஹரிந்தர் குமார் கூறுகையில், "சிஆர்பிஎப் வீரர் அஜித் குமார், சக வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், அஜித் குமார் 3 வீரர்களை சுட்டுக் கொன்றுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 10 மணிக்கு நடந்துள்ளது.


கொல்லப்பட்டவர்களில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த போகர்மால், டெல்லியைச் சேர்ந்த யோகேந்திர சர்மா, ஹரியாணாவைச் சேர்ந்த உமத் சிங் ஆகியோர் என அடையாளம் தெரிந்தது" எனத் தெரிவித்தார்.


;