சேலம்,அக்.20- இராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வாலிபர் சங்கத்தினர் நடத் திய போராட்டத்தைத் தொடர்ந்த ஆக்கிர மிப்பை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்ட னர். சேலம் மாவட்டத்தின் மையப்பகுதி யான அம்மாப்பேட்டையில் உள்ள குமர கிரி ஏரியில் இருந்து செல்லும் உபரிநீர், இராஜவாய்க்கால் பச்சப்பட்டி 40 ஆவது கோட்டம் வழியாக திருமணிமுத்தாற்றில் சென்று கலக்கிறது. இந்த வழித்தடத்தின் ஒருபகுதியை பல ஆண்டுகளாக தனி நபர் ஒருவர் இரும்பு வேலி அமைத்து ஆக்கி ரமிப்பு செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் இதுதொடர் பாக, மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு வழங்கியும் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் இராஜவாய்க்கால் ஆக்கி ரமிப்பை அகற்றக்கோரியும், ஆக்கிரமிப் பைக் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வா கத்தை கண்டித்தும் அம்மாபேட்டை மண் டல அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்துக் காத்திருப்பு போரட்டத்தில் ஈடு பட்டனர். இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை மண்டல அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அதி காரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களி டம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் உத்தர விட்டனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக, இந்த காத்திருப்பு போராட் டத்திற்கு வாலிபர் சங்கத்தின் மாநகர தலை வர் பிரபாகர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கணேசன், மாநகர செயலாளர் பெரியசாமி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.