சேலம் , செப்.10- சேலம் உருக்காலையை தனியா ருக்கு தாரைவார்ப்பதை கண்டித்து 37 ஆவது நாளாக ஆலை வாயில் முன்பு தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலை சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தில் சுமார் 2 ஆயிரத் துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் உருக்காலையை தனியாருக் தாரைவார்க்கும் வகை யில் மத்திய அரசு சர்வதேச டெண் ருக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் உருக் காலை தொழிலாளர்கள் ஆலையின் பிரதான நுழைவாயில் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செவ்வாயன்று 37 ஆவது நாளாக காத்திருப்பு போராட் டத்தை தொடர்ந்தனர். இப்போராட் டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலை வர் மோகன் குமாரமங்கலம் வாழ்த்திப் பேசினார். மேலும், இந்த போராட் டத்தில் காங்கிரஸ் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.கே.அர்த்தனாரி, சிஐடியு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் சேலம் அனைத்து தொழிற்சங்க நிர் வாகிகள் திரளாக கலந்து கொண் டனர்.