இளம்பிள்ளை, ஜூலை 1- இளம்பிள்ளையில் உள்ள வெள்ளி கடையில் 8 கிலோ விற்கும் மேல் வெள்ளி திருடு போன சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை சவுண்டம்மன் கோயிலை அடுத்த அ.புதூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிர மணி மகன் செல்வம் (43) என்பவர் வெள்ளி கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இவர் செவ்வாயன்று வழக்கம் போல் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் புதனன்று காலை கடையை திறக்க வந்த பொழுது கடை திறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சிய டைந்தார்.
மேலும், கடையில் இருந்து சுமார் 8 கிலோவிற்கும் மேல் வெள்ளி திருடுபோனது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடை உரிமையாளர் செல்வம் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துத்துள்ளார். இப்புகா ரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மகுடஞ்சாவடி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின் றனர்.