tamilnadu

மலைவாழ் மக்களிடம் மோசடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார்

 சேலம், டிச.24- சேலம் மாவட்டம், ஆத்தூரில் மலை வாழ் மக்களின் காப்பீட்டுத் தொகையை  பெற்று மோசடி செய்தவர் மீது   நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில்  சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகிலுள்ள பைத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வ ராஜ். இவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக அஞ்சல்துறையிலும் பணியாற்றி வந்தார்.  மேலும் காப்பீட்டு கழக முகவராகவும் செயல்பட்டுள்ளார். இந்நிலையில்  மலைவாழ் மக்களிடம் இருந்து சுமார்  ரூ.25 லட்சத்திற்கு மேல் வசூல் செய்துள் ளார். இந்நிலையில் செல்வராஜ் கடந்த  அக்.3ஆம் தேதி மரணமடைந்தார். இதை யறிந்த காப்பீடு செய்தவர்கள் செல்வ ராஜுன் மனைவி கிரிஜாவிடம் பாலிசி தொகைக்கான கணக்குகள் குறித்து   கேட்டுள்ளனர். இதற்கு கிரிஜா அந்த   பாலிசி தொகைக்கும், எனக்கும் எவ்வித  சம்பந்தமும் இல்லை என தெரிவித் துள்ளார்.  இதில் செல்வராஜுன் மகன் பாபு, மகள் கவிதா, மச்சான் சிவா என்கிற  சிவகுமார் ஆகியோரும் பாதிக்கப்பட்ட  மலைவாழ் மக்களை மிரட்டியுள்ளனர்.  இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.முருகேசன் தலைமையில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவ லகத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்ற  அதிகாரிகள் மனு மீது உரிய விசாரணை  நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.