tamilnadu

வாக்கு எண்ணும் மையத்தினை ஆட்சியர் ஆய்வு

சேலம், ஏப்.12- சேலத்தில் வாக்கு எண்ணும் மையத்தினை சேலம்மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டர். சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வாக்கு பதிவினை சேலம் பெரியார் பல்கலைக் கழகம் அருகே உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டார். மேலும் வாக்கு எண்ணிக்கையின் போதுதேவைப்படும் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தும் படி ஆலோசனை வழங்கினார். இந்தநிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினிமற்றும் தேர்தல் நடத்தும்அலுவலர்கள் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்

;