tamilnadu

img

தில்லியில் கொடூரத் தாக்குதல் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் மற்றும் காவல் துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிஏஏ, என்.பி.ஆர். என்.ஆர்.சியை எதிர்த்து தில்லியில் ஜனநாயக ரீதியில் போராடியவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய ஆர்.எஸ்.எஸ். குண்டர்களை தடுக்காமல் துணைபோன காவல் துறையினரைக் கண்டித்து மாதவரம் கொளத்தூரில் இஸ்லாமிய அமைப்புகள், மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் திங்களன்று (மார்ச் 2) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இமாம் சுஜித், யூனிஸ் இஸ்ரக், பஷீர், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, பகுதி செயலாளர்கள் வி.கமலநாதன், ஹேமாவதி, மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகிகள் சாரதி, தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.