இளம்பிள்ளை, நவ. 5- எடப்பாடி அருகேயுள்ள தேவூர் பகுதி யில் திமுக தலைவர் ஸ்டாலினை அநாகரிக முறையில் விமர்சித்து அதிமுகவினர் போஸ் டர் ஒட்டியதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சேலம் மாவட்டம், எடப்பாடி அருகில் உள்ள தேவூர் பேரூராட்சி பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை மிகவும் தரம்தாழ்ந்து விமர்சித்து அதிமுகவினர் இரவோடு இர வாக சுவரொட்டிகள் ஒட்டியதாக கூறப்படு கிறது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தேவூர் பகுதியைச் சேர்ந்த திமுகவினர், அச்சுவரொட்டிகளை அப்புறப்படுத்தினர். இதனையடுத்து, மீண்டும் அதிமுகவினர் சுவரொட்டிகளை ஒட்டிச் சென்றதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உண்டா னது. இதையடுத்து சுவரொட்டிகளை மீண்டும் அப்புறப்படுத்திய திமுகவினர், தேவூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் அசாதாரண சூழல் நிலவி வருவதால், அதை தவிர்க்கும் வகையில் சங்ககிரி டிஎஸ்பி ரமேஷ் தலைமையிலான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர்.