tamilnadu

img

எட்டு வழி சாலை வேண்டாம் - விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தினால் வழக்கு : காவல்துறை மிரட்டல்

சேலம், ஜூன் 8- எட்டு வழி சாலை திட்டம் தொடர்பான வழக்கை விரைந்து முடிக்க மத்திய அரசு உச்சநீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்ததை கண்டித்து சேலத்தில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டவர்களை வழக்குப்பதிவு செய்யப் போவ தாக காவல்துறையினர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது சேலம் - சென்னை இடையே  278 கிலோமீட்டர் தொலை விற்கு எட்டு வழி சாலை அமைக்கப் படும் என மத்திய அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து சில நாட் களிலேயே இத்திட்டத்திற்கான நிலங்களை கையகப்படுத்த தமி ழக அரசு தீவிரம் காட்டியது. இத னால் சேலம், தருமபுரி, கிருஷ்ண கிரி, திருவண்ணாமலை, காஞ்சி புரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்ட தால், நிலத்தை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து  விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர். மேலும், இத் திட்டத்திற்கு எதிராகவும், திட் டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி யும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இத்திட்டம் சுற்றுச்சூழலை பாதிக் கும் வகையில் இருப்பதால் திட் டத்தை ரத்து செய்வதோடு, கைய கப்படுத்தப்பட்ட நிலத்தை உரி மையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கடந்தாண்டு  ஏப்ரல் 8ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கினர்.  இதனால் பாதிக்கப்பட்ட விவ சாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந் தனர். இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கோரி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தனர்.

இந்த மேல்முறையீடு வழக்கு கடந்த ஒரு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில் மத்திய அரசு சார்பில் திடீரென  உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு  விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டம் முடங்கி  கிடப்பதாகவும் தெரிவித்து மேல் முறையீடு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவ டிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் பாதிக்கப்பட்ட விவசா யிகள் இராமலிங்கபுரம் பகுதியில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.  

தொடர்ந்து சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கும் எட்டு வழி சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என வும், இந்த வழக்கை விரைந்து முடிக்க மேல்முறையீடு செய்த மத் திய அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பசி, பட்டினியில் பலர் வாடி வரும் நிலையில், இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த பத்தாயிரம் கோடி ரூபாயை கொரோனா தடுப்பு பணிக்கு ஒதுக்கி பொது மக்களின் உயிர் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடைய 8வழி  சாலைக்கு எதிராக போராடும் விவ சாயிகள் மற்றும் பொதுமக்களை  கைது செய்வோம் என காவல் துறையினர் அச்சுறுத்தி வரு வதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.