பெரியார் பல்கலைக்கழகத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கணிப்பொறி, இணையம் உபகரணங்கள் கொள்முதலில் நிதி முறைகேட்டில் பதிவாளர் தங்கவேல் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை செய்ய தணிக்கை குழு ஒன்றை உயர்கல்வித்துறை அமைத்தது. தணிக்கை குழுவின் ஆய்வில் தங்கவேல் மீதான புகாரில் 8 குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய துணைவேந்தருக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.