tamilnadu

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சேலம், நவ.21- சேலத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொலி வாயிலாக நடை பெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தக வல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டத்தில் மாதந் திர விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் காணொலி (google meet) வழியாக வருகின்ற நவ.24 ஆம் தேதியன்று காலை 10.30 மணி முதல் நடை பெற உள்ளது. இந்த கூட் டத்தில் விவசாயிகள், விவ சாய சங்க பிரதிநிதிகள் தங்கள் வட்டாரத்திற்குட் பட்ட வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்க ளுக்கு சென்று கலந்து கொள்ளலாம். இதில், கலந்து கொள்ளும் விவ சாயிகள், விவசாய சங்க பிர திநிதிகள் காலை 10 மணிக்கு சென்று தங்களது பெயர் களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், வேளாண்மை மற்றும் அத்துறைகள் சம்மந்தமான தங்களது குறைகளை விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;