tamilnadu

img

சேலத்தில் நீட் தேர்வில் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் குடும்பத்தினரை சந்தித்து சிபிஎம் தலைவர்கள் ஆறுதல்

சேலம், ஜூன் 19- நீட் தேர்வில் தோல்வியடைந்த தால் தற்கொலை செய்து கொண்ட எடப்பாடி மாணவரின் குடும்பத்தி னரை மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். சேலம் மாவட்டம், எடப்பாடி தமிழக முதல்வரின் சொந்த  தொகுதியாகும். இத்தொகுதிக் குட்பட்ட வெள்ளான்டிவலசு பகுதியில் வசித்து வரும் சேட்டு (எ) ராஜா தையல் கடை நடத்தி வரு கிறார். இவரது மனைவி ராஜாத்தி. இவர்களுக்கு மதுமிதா சென் என் கிற மகளும் பாரத பிரியன் என் கிற மகனும் உள்ளனர். இதில் பார தப் பிரியன் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவில் இருந் துள்ளார். இவர் பத்தாம் வகுப் பில் 457 மதிப்பெண்களும், 12 ஆம்  வகுப்பில் 600க்கு 487 மதிப் பெண்களும் பெற்றுள்ளார். இத னைத் தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் 111 மதிப் பெண் மட்டுமே எடுக்க முடிந்தால் தனது மருத்துவர் கனவு பறி போனதை என எண்ணி கவலை யடைந்த பாரதபிரயன், கடந்த 15 ஆம் தேதியன்று தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், புதனன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் பி. ராமமூர்த்தி தலைமையில் பாதிக் கப்பட்ட குடும்பத்தினரை சந் தித்து ஆறுதலையும், இரங்க லையும் தெரிவித்தனர். இதனையடுத்து செய்தியா ளர்களிடம் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் நீட்தேர்வு என்ற பெயரில் ஏழை எளிய மாணவர்க ளின் மருத்துவர் கனவை அழித்து, தற்கொலைக்கு தூண்டி வருகிறது. இதனால் பல உயர்கள் பலியாகி வருகிறது. இந்த ஆண்டு மட்டும்  தமிழகத்தில்  நான்கு மாணவர் கள் தற்கொலை செய்து கொண்டு  உள்ளனர். இந்த தற்கொலைக ளுக்கு மத்திய, மாநில அரசுகள் பெறுப்பு ஏற்க வேண்டும். மேலும் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளித்திட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.  ரூ.50 லட்சம் நிவர ணம் வழங்கிட வேண்டும் என தெரிவித்தார்.  இதில், சிபிஎம்  மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.வெங் கடபதி, எம்.குணசேகன்,  எடப்பாடி ஒன்றிய செயலாளர் பெரியண் ணன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பி.கணேசன் உள் ளிட்டு பலர் பங்கேற்றனர்.