சேலம், மார்ச் 2- தொழிலாளர் விரோத மத்திய பட்ஜெட்டை கண் டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திங்க ளன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் பட்ஜெட்டில் தொழிற்சங்கங்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிராகரிக் கப்பட்டுள்ளன. கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத் திற்காக இந்த பட்ஜெட் உள்ளது எனவும், எல்ஐசி, பிபிசிஎல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை இந்த ஆண்டில் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் விற்கப் போவதாக பட்ஜெட்டில் கூறியுள்ளது. மருத்துவம், கல்வி, சமூக நலனுக்கான நிதி ஒதுக்கீ டுகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. நலிந்த நிலையில் உள்ள விவசாயிகளை இந்த பட்ஜெட் ஆனது ஒட்டுமொத்தமாக கைவிட்டு விட்டது. மேலும், தொழிலாளர் விரோத நலச்சட்டங்களை திருத்தக்கூடாது, தொழிலாளர் சட்ட தொகுப்பை ரத்து செய்யவேண்டும், பொதுத்துறை பங்குகளை விற்கக் கூடாது, பொதுத்துறையில் ஆட்குறைப்பு செய்யக்கூடாது, காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஐஎன்டியூசி மாவட்டத் தலைவர் வடமலை தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் பி.பன்னீர் செல்வம், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே.தியா கராஜன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கட பதி, ஏ. கோவிந்தன், எல்பிஎப் சார்பில் பழனியப் பன், ஏஐடியூசி சார்பில் பரமசிவம், முனுசாமி, எச்எம் எஸ் சார்பில் கோவிந்தன், ஏஐசிசிடியூ சார்பில் சந்திர மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.