சேலம், அக்.20- சேலம் சட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் சனி யன்று சமரசம் மற்றும் நடுவர் மையம் குறித்து விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். சமரசம் என்பது ஒரு முறை சாரா வகையில் சட்ட சிக்கல்களை தீர்த்துக் கொள்ள உதவும் ஒரு கருவி ஆகும். வழக்கின் தன்மையை மட்டுமே ஆராயாமல், வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை சமரசமாக பேச வைத்து அவர்களுக்குள் தீர்வு ஏற்படுத்த உதவும் மையமாகும். இந்த சமரச தீர்வு மையம் தமிழகத் திலேயே முதல்முறையாக சேலத்தில் சென்ட்ரல் சட்டக்கல்லூரி வளாகத்தில் துவங்கப்பட உள்ளது. இந்த சமரச தீர்வு மையம் குறித்து பொதுமக்க ளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுருபரன் கொடிய சைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி அஸ்தம்பட்டி, காந்தி ரோடு, முள்ளு வாடி கேட் வழி யாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இப்பேரணியில் சமரசம் மற்றும் நடுவர் மையம் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு சட்ட கல்லூரி மாணவ, மாணவியர் முழக்கங்கள் எழுப்பிய வாறு சென்றனர். இந்த பேரணியில் 500க்கும் மேற் பட்ட சட்ட கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.