ஆவடி,பிப்.17- ஆவடியை அடுத்த முத்தா புதுபேட்டை மேலப்பேடு பெருமாள் கோவில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தவர் கோவிந்தராஜ் (29). கூலித் தொழிலளி. இவரது சொந்த ஊர் சென்னை மடிப்பாக்கம். இவருடன் விக்னேஷ், தங்கமணி ஆகிய இருவரும் அந்த அறையில் தங்கி இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை வெளியே சென்ற கோவிந்த ராஜ் அதன் பிறகு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. உடன் தங்கி இருந்த வர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் திங்களன்று காலை மேலப்பேடு பகுதியில் உள்ள குளத்தில் கோவிந்த ராஜ் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.