tamilnadu

தமிழகத்திற்கு கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

சென்னை,அக்.1- மேற்கு திசை காற்றின் வேகம் மாற்றம் மற்றும் பருவமழை தொடங்க இருப்பதன் காரணமாக, சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்வதை நாம் காண முடிகிறது. 

இந்த நிலையில், இந்திய வானி லை ஆய்வு மையம் வெளி யிட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்கு மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

குறிப்பாக தமிழகம், புதுச்சேரி யில் அக்டோபர் 2 முதல் 5 ஆம் தேதி வரை கன மழை எதிர்பார்க்கப் படும் பகுதிகளாக உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. அதே நேரத்தில், சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் வானம் ஓரளவு மேகமூட்டத்து டன் காணப்படும் என்றும் சில இடங் களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

அதேபோல், அக்டோபர் 1 முதல் 3ஆம் தேதி வரை மன்னார் வளை குடா, தென் தமிழக கடலோர பகு திகள், குமரி கடல் பகுதிகளில் சூறைக் காற்று வீசும் வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதுமிருந்து 2024 ஆம் ஆண்டுக்கான தென்மேற்குப் பருவ மழை செப்டம்பர் 30 அன்று முடிவுக்கு வந்துள்ளது. இந்த பருவமழை காலத்தில் நாடு முழுவதும் 934.8 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை இயல்பை விட இந்தாண்டு 18 விழுக்காடு கூடுதலாகப் பெய்து ள்ளது என்று தெரிவித்திருக்கிறது.