tamilnadu

img

துப்புரவு தொழிலார்களுக்கு வழங்கும் உணவில் புழு

சென்னை, ஜூலை 7- கொரோனா தடுப்பு பணியில் ஈடு பட்டுள்ள துப்புரவு தொழிலாளர்ளுக்கு தர மற்ற உணவுகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கொரோனா தடுப்பு பணியில் முன்கள  வீரர்களாக துப்புரவு, களப்பணி தொழிலாளர் கள் உள்ளனர். இவர்கள் தினசரி மக்களை சந்தித்து உடல் வெப்ப பரிசோதனை செய்  வது, தொற்றுள்ளவர்கள் பகுதிக்கு சென்று  குப்பைகளை அகற்றுவது, மருந்து தெளிப்  பது உள்ளிட்ட பணிகளை செய்து வரு கின்றனர். இவர்களுக்கும், அலுவலர்களுக்கும் மாந கராட்சி நிர்வாகம் காலை, மதியம் உணவு வழங்கி வருகிறது. அந்த உணவுகள் தரமற்ற வையாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. காலையில் வழங்கப்படும் டிபன் புளிப்பு டன் துர்நாற்றம் வீசுவதாகவும், மதியம் வழங்  கப்படும் உணவு உண்ண தகுதியற்றதாகவும் உள்ளதாக  ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஞாயிறன்று (ஜூலை 5) மண்டலம் 11ல் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட இட்லியில் புழு இருந்துள்ளது. இதனால் ஊழி யர்கள் உணவை குப்பையில் எறிந்து எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர். அதேபோன்று செவ்வாயன்று (ஜூலை 7)  மண்டலம் 15 சோழிங்கநல்லூரில் பணியாற்  றும் ஊழியர்களுக்கு காலையில் வழங்கப்  பட்ட பொங்கலிலும் புழு இருந்துள்ளது. இத னால் ஊழியர்கள் அவற்றை எறிந்துவிட்டு பட்டினியோடு பணி செய்துள்ளனர். நன்றிக்குரியவர்கள் என்று வார்த்தைக்கு வார்த்தை கூறும் ஆட்சியாளர்கள், அவர்க ளுக்கு மோசமான உணவுகளை வழங்கு கின்றனர் என்று தொழிலாளர்கள் வேதனைப்  படுகின்றனர்.