கிருஷ்ணகிரி, ஆக. 28- கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை நெடுஞ்சாலை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு 4 வழிச்சாலையாக மாற்றுவதற்கான பணி கள் துவங்கப்பட்டது. அதையொட்டி 6 மாதத் திற்குள் நிலம் கையகப்படுத்தப்பட்டு, பணி கள் துவங்கின. அப்போது ஒப்பந்ததாரரு டன், ஆளும் கட்சியினருக்கு ஏற்பட்ட பிரச் சனையால் நெடுஞ்சாலை விரிவாக்க பணி கள் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த நெடுஞ்சாலை திருவண்ணா மலை வரை குண்டும் குழியுமாக மாறிவிட்டன. சிறு மழை பெய்தால் கூட சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதுபோல் மிட்டப் பள்ளி, தொகரப்பள்ளி காப்புக்காடு, சாமல்பட்டி பகுதியிலும் சாலை கள் பழுதடைந்துள்ளன.
300க்கும் மேற்பட்ட கிரானைட் தொழிற் சாலைகளும், 50க்கும் மேற்பட்ட கல் குவாரி களும் ஜெகதேவியில் உள்ளன. இந்த சாலை யில் 500க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள், 200க்கும் மேற்பட்ட லாரிகள் கிரானைட் கற் களையும், கட்டுமான பொருட்களையும் ஏற்றிக் கொண்டு தினசரி செல்கின்றன. இரவில் கனரக வாகனங்கள் போக்கு வரத்தும் அதிகமாக உள்ளன. மேலும் இந்த சாலையில் ஊத்தங்கரை பாம்பாறு மீது கட்டப்பட்ட பாலம் முடியும் நிலையில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தினசரி வாகன விபத்துகள் நடைபெறுவதுடன், உயிரிழப்பு களும் ஏற்படுகின்றன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. மேலும் இந்த சாலை பணிக்கான ஒப்பந்ததாரர் பிரச்சனையை தீர்க்க அரசும், நெடுஞ்சாலைத் துறையும் எந்த நடவடிக்கை யும் எடுக்காமல் உள்ளது. எனவே கிருஷ்ணகிரி - திருவண்ணா மலை நெடுஞ்சாலைப் பணிகளை உடனடி யாக துவங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெயராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.