அம்பத்தூர், மார்ச் 4 - அம்பத்தூர் அடுத்த திருமுல்லை வாயல் சென்னை திருவள்ளூர் நெடுஞ்சாலையை ஒட்டி சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் அரபாத் ஏரி உள்ளது. இதனை சுற்றி மணிகண்ட புரம், சரவணா நகர் உள்ளிட்ட பகுதி களில் ஆயிரக்கணக்கான குடியிருப்பு கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு இந்த ஏரி நீர் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கியது. நாளடைவில் பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஏரியை முறையாக பராமரிக்காததால், ஏரியில் கழிவு நீர் கலந்து குடிக்க பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பருவமழை பொய்த்தபோது ஏரியை படிப்படியாக சமூகவி ரோதிகள் ஆக்கிரமித்து பிளாட் போட்டு விற்று விட்டனர். இதனை தடுப்பதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் அரபாத் ஏரியின் பரப்பளவு சுமார் 20 ஏக்கர் வரை தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியின் நிலப்பகுதியை ஆக்கிரமித்து தனியார் மோட்டார் நிறுவனம், அடுக்குமாடி குடியி ருப்புகள், வீடுகள் என குடியிருப்பு பகுதியாக தற்போது ஏரி உருமாறி யுள்ளது. மேலும் ஆக்கிரமிப்பு வீடுக ளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியிலேயே விடப்படுகிறது. இது தவிர ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட வீடுகளில் இருந்து ஒப்பந்த லாரி மூலம் எடுக்கப்படும் கழிவு நீரும் ஏரிக்கு செல்லும் கால்வாயில் விடப்படுகிறது. இந்த கழிவு நீரை ஏரியில் விடும் டேங்கர் லாரிகள் குறித்து சமூக ஆர்வலர்கள் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும், காவல் துறையினர் கண்டுகொள்வதில்லை. இதனால் கழிவு நீர் ஏரியில் கலந்து கூவம் ஆறு போல் மாறிவருகிறது. ஏரியைச் சுற்றி யுள்ள வீடுகளில் உள்ள கிணறு மற்றும் போர்வெல் தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஏரி ஆக்கிர மிப்பு குறித்து சிலர் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு அரசு அதிகாரிகளி டம் புகார் அளித்தனர். இதையடுத்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஏரியை ஆக்கிர மித்து உள்ளவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். அதில் 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பை அகற்ற ஆக்கிரமிப்பாளர்களும் முன்வர வில்லை, பொதுப்பணித்துறை அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே “நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவனின் வாக்குக்கேற்ப, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள மழை நீர் வடிகால்களுக்கான எல்லைக் கோட்டு வரைபடங்க ளைத் தயாரித்து அதன்படி வடிகால் களை அமைக்க வேண்டும். மழை நீர் வடிகால், ஏரி, குளங்கள் ஆக்கிர மிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். தேவைப்பட்டால் அவர்க ளுக்கு வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அருகிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும். வருங்காலங்க ளில் மழை நீர் வடிகால், ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பவர்கள் மீது பாரபட்ச மின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வடிகால்களில் ஏரியில் கழிவு நீர் விடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இனிவரும் காலங்களில் இதைவிட கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் அபாயம் உள்ளது.