tamilnadu

மத்திய அமைச்சருடன் பேசியது என்ன? டி.ஆர்.பாலு விளக்கம்

சென்னை, ஜூன் 9- மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 37 இடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கூட்ட ணிக் கட்சியினரோடு சேர்த்து திமுக 23 எம்.பி.க்களைப் பெற்று நாட்டிலேயே மூன்றா வது மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.  இந்த நிலையில் நாடாளு மன்றத்தின் முதல் கூட்டத் தொடர் வரும் 17ஆம் தேதி துவங்குகிறது. நாடாளு மன்றத்தை சுமுகமாக நடத்துவது தொடர்பாக திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவை, நாடாளுமன்ற அலுவல் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இணையமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் ஆகி யோர் சந்தித்துப் பேசியிருந்த னர். ‘ஆறு மாதங்களுக்குப் பிறகு திமுக விரும்பினால் அமைச்சரவையில் இணைந்துகொள்ளலாம்’ என்று அவர்கள் டி.ஆர்.பாலுவிடம் அழைப்பு விடுத்ததாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது. இதுபற்றி பதிலளித்து டி.ஆர்.பாலு ஜூன் 9 ஞாயி றன்று வெளியிட்டுள்ள அறி க்கையில், “நாடாளுமன்றம் ஒவ்வொரு முறையும் கூடுவ தற்கு முன்னால் நாடாளு மன்ற நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்றுள்ள அமைச் சர்கள் எதிர்க்கட்சித் தலை வர்களைச் சந்தித்து கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெற ஆதரவு கேட்பது வழக்கமான ஒன்று. அந்த நடைமுறை பழக்கப்படி நாடாளுமன்ற அலுவல் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இணை அமைச்சர் அர்ஜூன்ராம் என்னுடன் கலந்து பேசிய தும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதும் உண்மைச் செய்திகள்” என்று தெரிவித்தார். மேலும், “அவர்கள் என்னிடம் பேசிய போது நாடாளுமன்ற நடவடிக்கை கள் எந்தெந்த தேதிகளில் எத்தகைய நிகழ்வுகள் அர சாங்கம் மேற்கொள்ள விருக்கிறது என்பதை தெரி யப்படுத்தினர். ஆனால் ஆறு மாதம் கழித்து திமுக உறுப்பி னர்கள் பாஜக மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என்ற தவறான செய்தி பத்திரிகையில் வெளியாகியுள்ளது” என்று விமர்சித்தவர், மு.க.ஸ்டாலினின் அடி யொற்றி பயணிக்கின்ற உண்மை தொண்டர்களும் வெளிப்படையானவர்கள் மட்டுமல்ல; ஒளிவு மறை வற்ற, நேர்மையான ஜனநாய கத்தின் ஊற்று கண்கள் என்ப வற்றை வரலாறு அறியும். இதில் ஜனநாயகத்தை இழிவு படுத்துவோருக்கு வேலை இல்லை என்றும் தெரிவித்தி ருக்கிறார்.