சென்னை, நவ.20- தவறான செய்திகளை கண்டறி வதற்காக தமிழக அரசு நியமித் துள்ள உண்மை சரிபார்ப்பு குழு, ஒரு தணிக்கை அமைப்பு தானே? இதில் என்ன தவறு என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி யுள்ளது.
அனைத்து ஊடக தளங் களில் தமிழ்நாடு அரசு, அமைச்ச கங்கள், துறைகள் தொடர்பாக வெளிவரக்கூடிய தவறான செய்தி களை கண்டறியும் வகையில், அரசின் சிறப்புத் திட்ட அம லாக்கத் துறையின் கீழ் உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்றை தமிழ் நாடு அரசு அமைத்துள்ளது.
இந்த குழு அமைத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் நிர்மல்குமார் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதி பதி கங்காபூர்வாலா மற்றும் நீதி பதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், இது சம்பந்தமாக ஒன்றிய அரசு ஏற்கெனவே 2021 விதிகள் வகுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு அமைத் துள்ள உண்மை சரிபார்ப்பு குழு, தகவல் தொழில்நுட்ப சட்ட விதி களுக்கு முரணானது என்றார்.
மேலும், உண்மை சரிபார்ப்பு குழுவை ஒன்றிய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது. இது அரசின் கையில் உள்ள ஆபத்தான ஆயுதம் எனவும் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, பொய் செய்தி கள் பரவுவதை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடியாதா, இது ஒரு தணிக்கை முறை தானே, இதில் என்ன தவறு, காவல்துறைக்கு உதவத்தான் அமைக்கப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்.
அப்போது மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், பீகார் தொழி லாளர்கள் தொடர்பான தவறான தகவல்கள் பரவியது குறித்து சுட்டிக்காட்டினார். குழுவில் தகுதியான நபரை தான் நியமித்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, ஒன்றிய அரசு நியமித்துள்ள உண்மை சரிபார்ப்பு குழுவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த வழக்கின் முடிவை தெரிந்து கொள்ளலாம் எனக் கூறி, அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை டிசம்பர் 6 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.