tamilnadu

img

ஜனநாயக உரிமைகளை தாழவிடோம் ! - சு.வெங்கடேசன் எம்.பி

ஜனநாயக உரிமைகளை தாழவிடோம் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது
இந்திய விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வையும் அழிக்கும் மத்திய வேளாண்சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகத்தில் விவசாய சங்கங்களின் சார்பில் தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களில் காவல்துறையினரால் செய்யப்படும் அத்துமீறல்கள் குறித்து காவல்துறையின் தென்மண்டல ஐ.ஜி முருகன் IPS அவர்களிடம்  பேசினேன். 
குறிப்பாக மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்ட  தோழர் பாலபாரதி அவர்களிடம் திண்டுக்கல் காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது; கடும் கண்டத்திற்கு உரியது . அதில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளேன். 
இறுதியில் நாளை விவசாய அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் நடைபெறக் கூடிய காத்திருப்பு போராட்டத்திற்கு தென்மண்டலத்துக்கு உட்பட்ட 10 தென் மாவட்டங்களில் அனுமதி வழங்குவதாக கூறியுள்ளார். 
அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள ஜனநாயக ரீதியலான போராட்ட உரிமையை உயர்த்திப் பிடிப்போம்.
அதே நேரத்தில் கொரனா பரவல் தடுப்பு சம்பந்தப்பட்ட அரசாணையில் அதிமுகவுக்கும் பிஜேபிக்கும் விதிவிலக்கு என்று எந்தக்குறிப்புமில்லை. 
கொரனோ வைரஸ் தாக்க முடியாத உயிரினமாக  இவர்கள் இருப்பதாக எந்த மருத்துவ கண்டுபிடிப்பும் இதுவரை வரவுமில்லை என்பதையும் உரக்கச்சொல்வோம்

;