தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 17 நாட்களாக தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து தொழிற்சங்கம் சார்பில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பணிமனை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சு.பால்சாமி, கே.ரவிச்சந்திரன், எல்.பி.சரவணதமிழன், கே.சீனிவாசன் (சிஐடியு), ஆர்.துரைசாமி (ஏஐடியுசி), ஏ.எஸ்.குமார் (எல்டியுசி), ஆர்.கோபி, சி.சுந்தரராஜ், அ.ஜான் (சிபிஎம்) ஆகியோர் பேசினர்.