tamilnadu

வாணியம்பாடி: 21 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆம்பூர், மே 19 - திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகரில் வசித்து வருபவர் சாராய வியா பாரி மகேஸ்வரி. அவரது வீட்டை திங்க ளன்று (மே 17) வாணியம்பாடி காவல் துணை  கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலை மையிலான காவல்துறையினர சுற்றி வளைத்தனர். அப்போது அவரது வீட்டிற்குள்  மறைத்து வைத்திருந்த 21 கிலோ கஞ்சா,  20 லட்சம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை களை காவல்துறையினர் பறிமுதல் செய்த னர். இது தொடர்பாக மகேஸ்வரி, அவரது கணவர் சீனிவாசன் உட்பட 7 பேர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த னர். தப்பி ஓடிய இரண்டு பேரை காவல்துறை யினர் தேடி வருகின்றனர். கைது நடவடிக்கையின் பெண் காவலர்  சூர்யா மீது தாக்குதல் நடத்தினர். இதில் அவர்  காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.