tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே  இடி-மின்னல் தாக்கி இருவர் பலி

கள்ளக்குறிச்சி, மார்ச் 11- உளுந்தூர்பேட்டை அருகே இடி மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி யில் உள்ள பல்வேறு கிரா மங்களில் செவ்வாய்கிழமை (மார்ச் 11) சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, கள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ராமர் (72) மற்றும் அவரது பேரன் சூர்யா (26), பாலி கிராமத்தைச் சேர்ந்த காசி லிங்கம் ஓய்வு பெற்ற தலைமை காவலர் காசி லிங்கம் ஆகிய மூவரும் திருச்சி செல்லும் சாலை யில் ஓரம் உள்ள புளியமரத்து அடியில்  நின்று உள்ளனர். இடி தாக்கியதில்  ராமர், காசி லிங்கம் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர்.  இளைஞர் சூர்யா மட்டும் படுகாயத்துடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீ சார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

லாரி மோதி பெண் பலி

சென்னை, மார்ச் 11- சென்னை ஐசிஎப்பில் இருசக்கரவாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார். ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் பத்மினி (51). இவர் மகன் அரிகரன் (24). பத்மினி தனது மகன் அரி கரனுடன் இருசக்கர வாகனத்தில் கொளத்தூரில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு திங்கட்கிழமை சென்றார். பின்னர் அங்கிருந்து இருவரும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டி ருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு லாரி, அவர்கள் மீது திடீரென மோதியது. இதில் மோட்டார் சைக்கிளி லிருந்து கீழே விழுந்ததில் பத்மினி சம்பவ இடத்தி லேயே பலியானார். அரி கரன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

தமிழில் பெயர் பலகை இல்லாத 
கடைகள் மீது நடவடிக்கை! 

சென்னையில் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மீது நட வடிக்கை எடுக்கப்படும் எனறு மாநக ராட்சி தெரிவித்துள்ளது. தொழில் நிறுவனங்கள், கடைகளின் பெயர் பலகை தமிழில் பெரிதாக வைக்க வேண்டும். அதற்கு அடுத்த அளவில் ஆங்கிலத்திலும் அதற்கும் குறைந்த அளவில் விருப்பமுள்ள பிற மொழிகளில் வைக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். இதனை பெரும்பாலானவர்கள் பின்பற்றாமல் தமிழ் எழுத்துக்களை சிறியதாகவும், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளை பெரிதாக எழுதி உள்ள பலகைகள் சென்னையில் பல பகுதிகளில் காணப் படுகிறது. கடைகளின் பெயர் பலகை யில் தமிழ் எழுத்துக்கள் சிறிய அள வில் போடப்பட்டும், பிற மொழிகளில் பெரிதாகவும் வைக்கப்பட்டு இருப்பது குறித்து புகார்கள் மாநகராட்சிக்கு வந்தன. சென்னை மாநகராட்சியில் 70 ஆயிரம் கடைகள் உரிமம் பெற்று செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பாரிமுனை, சவுகார்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. 7 நாட்களுக்குள் சரி செய்யவில்லை என்றால் அந்த கடை களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து  செய்யலாம் என முடிவு செய்யப் பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல் வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தமிழில் பெயர் பலகை கட்டாயம் வைக்க வேண்டும் என்பதையும் அதை முறையாக பின்பற்றாத கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதி காரிகள் தலைமையில் கூட்டம் நடத்த ப்பட்டு தமிழில் பெயர் பலகை வைக்க கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் இதற்கான கூட்டம் செவ்வாயன்று நடந்தது. இக்கூட்டத் தில் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது விரைவாக நடவடிக்கை  எடுக்க வேண்டும் என முடிவு செய்யப் பட்டது. மாநகராட்சி கவுன்சிலர்களும் தங்கள் பகுதியில் உள்ள கடைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.