சென்னை, ஏப்.18- திருநெல்வேலி தொகுதியில் சுயேட்சையாக போட்டி யிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த ஏப்ரல் 6 அன்று தாம்பரம் ரயில் நிலையத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திர னின் பணியாட்கள் சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேர் உரிய ஆவணங்களின்றி 4 கோடி ரூபாய் பணத்துடன் பிடிபட்டனர்.
இதுதொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்டவிரோ தப் பணப் பரிமாற்றச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கு மாறு அமலாக்கத்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மனு மீது அமலாக்கத்துறை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததால் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தமிழக தேர்தல் ஆணை யரிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், அந்த மனு மீதும் நட வடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே நயினார் நாகேந்தி ரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு உத்த ரவிட வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இம்மானு வேல் முறையிட்ட நிலையில், அதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, ஏப்ரல் 18 அன்று விசாரித்தது. அப்போது, 4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால், இதன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.